அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்கள் குறித்து தெரிவிக்க இரண்டு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்4டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட தேசிய மகளிர் குழுவின் 1938 மகளிர் உதவி மைய சேவை மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் 1929 குழந்தைகள் உதவி மைய சேவை ஆகியவை ஆபத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து தெரிவிக்க செயல்பாட்டில் உள்ளன.
அதன்படி, பெண்கள் பற்றிய தகவல்களை 1938 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம், மேலும் குழந்தைகள் பற்றிய தகவல்களை 1929 என்ற எண்ணுக்கு இலவசமாக, 24 மணி நேரமும், மூன்று மொழிகளிலும் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.









