நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நிலவரங்களை அறிந்து கொள்ளும் முகமாக தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் செயலாளர் க. திலீப் குமார் பிரதேச தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர்களின் சகிதம் நேரடி கள விஜயத்தை மேற்கொண்டிருந்தார் .
இதன் போது கதிரவெளி வெருகல் பிரதேச எல்லையில் அமைந்துள்ள கல்லரிப்பு மக்கள் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக இடம் நகத்தும் நடவடிக்கையில்
பிரதேச செய்யலகம், பிரதேசசபை மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து கதிரவெளி விக்னேஸ்வரா பாடசாலை இடைத்தங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று பால்சேனை மற்றும் அதன் அன்மித்த கிராம மக்களின்
வீடுகளுக்குள் வெள்ள நீர்புகுந்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள பாடசாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,
இடைத்தங்கள் முகாம்களின் உள்ள அடிப்படை குறைபாட்டு வசதிகள் மற்றும் உணவு வழங்குதல் என்பன தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
அவற்றில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் செயற்பாட்டில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான சுனில் ஹெந்த நெத்தியின் கவனத்திற்கு தெரியப்படுத்தி, நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதுடன், மக்களின் நலனில் கவனம் செலுத்தப்படும் எனவும் திலீப்குமார் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன் ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவுக்கும் வெள்ளஅனர்த்தம் தொடர்பாக இடர் கால நெருக்கடிக்கான செலவாக 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.








