திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால்குழி பிரதேசத்தில் வெள்ளநீர் அதிகரித்ததால் காலை முதல் வீதி முழுமையாக மூடப்பட்டுள்ளது.
பிரதான வீதியின் உப்பாறு பாலத்திற்கு முன்னும், இறால்குழி பிரதேசத்திலும் வீதித்தடை ஏற்படுத்தப்பட்டு பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மூதூர் பிரதேசம் வழியாக திருகோணமலை மற்றும் கிண்ணியாவினூடாக மட்டக்களப்புக்கு செல்லும் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இவ்விடத்தில் அதிகளவில் தரித்து நிற்பதை கவனத்தில் கொண்டு, அதிகாரிகள் அவசர தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.









