வெள்ள அபாயம் குறையும் போது நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுவதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த எலிக்காய்ச்சல், வெள்ள அபாயத்துடன் நாடு முழுவதும் பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.








