மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கல்லரிப்பு மக்களுக்கு உலர் உணவு பொதிகளை மற்றும் கற்றல் உபகரணங்கள் என்பன கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் வர்ண ஜெயசுந்தர இன்று (03) வழங்கி வைத்தார்.
இதன் போது வாகரை பிரதேச சபை தவிசாளர் க.தெய்வேந்திரன் லயன்ஸ் கழக ஆளுநர் லோகேந்திரன் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் லலித்லியாரட்ன வாழைச்சேனை பிராந்திய உதவி போலீஸ் அத்தியட்சகர் ஜெயா ரூல் மட்டக்களப்பு உதவி போலீஸ் அத்தியட்சகர் ஜமீல் மற்றும் வாழைச்சேனை லயன்ஸ் கழக தலைவர் எஸ் .பார்த்திபன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது குறித்த இடைத்தங்கள் முகாமில் 65 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு தலா 7000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் உதவி பொருட்களை லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் இருவர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










