Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரானில் கிறவல் மண் திருடிய உல்லாச விடுதியினர்; பொலிஸில் லவக்குமார் முறைப்பாடு

கிரானில் கிறவல் மண் திருடிய உல்லாச விடுதியினர்; பொலிஸில் லவக்குமார் முறைப்பாடு

6 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கிரான் பகுதியில் வீதி நிர்மாணிப்பதற்காக வீதி ஓரத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் பொறிக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான கிறவல் மண்ணை, உல்லாச விடுதி ஒன்றினைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் பிக்கப் ரக வாகனம் ஒன்றில் திருடி கொண்டு சென்றவர்களுக்கு எதிராக சமூக செயற்பாட்டாளர் விமலசேன லவக்குமார் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

கிரான் கும்புறுமூலை சந்தியில் இருந்து கடற்கரை வரையான மரமுந்திரிகை தோட்ட வீதியை, வீதி அபிவிருத்தி திணைக்களம் காப்பேற் வீதியாக நிர்மாணித்து வருகின்றனர்.

இந்த வீதி நிர்மாணிப்பின் போது வீதியின் இரு பகுதிகளையும் பாதுகாப்பதற்காக கிறவல் மண் போடப்பட்டு, செப்பனிடுவதற்காக கிறவல் கொண்டுவரப்பட்டு குறித்த வீதி ஓரங்களில் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குவிக்கப்பட்ட கிறவல்களை சம்பவ தினமான இன்று (04) பகல் அந்த பகுதியில் உள்ள உல்லாச விடுதி ஒன்றைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் பிக்கப் ரக வாகனம் ஒன்றில் சென்று அங்கு செப்பனிடுவதற்கு குவிக்கப்பட்டிருந்த கிறவல்களை திருடி தமது வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

அந்த பகுதியில் சென்ற சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் இதனை அவதானித்து இது அரச சொத்து இதனை திருடுவது சட்டவிரோதம் என தெரிவித்தார். இருந்தும் அதனை பொருட்படுத்தாது அவர்கள் கிறவலை திருடி தமது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து ஒரு சமூக செயற்பாட்டாளரும் பொது மகன் என்ற அடிப்படையில் அரச சொத்தை திருடிச் சென்றவர்களுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
Next Post
அதிவேக நெடுஞ்சாலை இலவசப் பயணம் நிறுத்தம்; கட்டண வசூல் மீண்டும் ஆரம்பம்

அதிவேக நெடுஞ்சாலை இலவசப் பயணம் நிறுத்தம்; கட்டண வசூல் மீண்டும் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.