நாவற்குடா பகுதியில் கசிப்பு காய்ச்ச பயன்படுத்தும் திரவமான கோடாவுடன் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (04) ஊர்மக்களால் கிராம உத்தியோகத்தருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து, கிராம உத்தியோகத்தர் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்து, குறித்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

இதன்போது 183.750 மில்லிலீட்டர் கோடா, ஒரு பரல், கசிப்பு காய்ச்ச பயன்படுத்து பொருட்கள் என்பன மீட்டப்பட்டன.

குறித்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இந்தநிலையில் நாவற்குடா மக்கள் உடன் நடவடிக்கையினை மேற்கொண்ட கிராம உத்தியோகத்தர், பொலிசாருக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.










