Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய 5 சந்தேக நபர்கள் கைது

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய 5 சந்தேக நபர்கள் கைது

6 months ago
in செய்திகள்

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் 5 பேரை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி தெஹிவளை – வனரத்ன வீதிப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே துப்பாக்கியால் சுட்டு ஒருவரைக் கொலை செய்து மற்றுமொருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்கு பழிவாங்கும் வகையில், தெஹிவளை பகுதியிலேயே இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

அதன்படி, ஒருவரைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுதல், அந்தக் குற்றத்திற்கு உதவுதல் மற்றும் தூண்டுதல், சட்டவிரோதமான அத்துமீறிய கும்பலின் உறுப்பினர்களாகச் செயல்படுதல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக குறித்த ஐவரும் ரத்மலானை பகுதியில் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் பன்குலம, ரத்மலானை, பொரலெஸ்கமுவ மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்களில் பன்குலம பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரிடமிருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சந்தேக நபர் 2025.01.19 அன்று கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட படோவிட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்தின் சூத்திரதாரியாக செயல்பட்டுள்ளதாகவும், அந்தக் குற்றம் தொடர்பாக கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தத் தயாராக இருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத் தகட்டின் பதிவு இலக்கம் ஹோமாகம பொலிஸ் பிரிவில் திருடப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளுடையது என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று (11) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை – சர்வதேச கடற்கொள்ளை என வெனிசுலா குற்றச்சாட்டு

அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை - சர்வதேச கடற்கொள்ளை என வெனிசுலா குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.