Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிந்தவூர் பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீதி தாக்குதல்; நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் தலைமறைவு

நிந்தவூர் பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீதி தாக்குதல்; நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் தலைமறைவு

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நிந்தவூர் பிரதேச சபையினுள் பாராளுமன்ற உறுப்பின் தலைமையயிலான குழு ஒன்று உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தலைமறைவாகிய நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று புதன்கிழமை (10) உத்தரவிட்டார். அதேவேளை தலைமறைவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,

குறித்த பிரதேச சபையின் தவிசாளர் அண்மையில் பதவி விலக்கப்பட்டார். இந்த நிலையில் பிரதி தவிசாளர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த சட்டத்தரணி எம்.ஜ. இர்பான் சபை நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினம் திங்கட்கிழமை பகல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் பிரதி தவிசாளர் அறையில் உள் நுழைந்து சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என தெரிவித்து பிரதி தவிசாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு பொலிசாரை வரவழைக்கப்பட்டனர்.

அங்கு சென்ற பொலிசார் இது நிர்வாக ரீதியான பிரச்சனை எனவே கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பிரதி பணிப்பாளரிடம் முறையிட்டு இதற்கான தீர்வை பெறுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

இதனை தொடர்ந்து பிரதி தவிசாளர் தனது சபை கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பிற்பகல் 2.00 மணியளவில் பிரதி தவிசாளரின் காரியாலயத்துக்குள் அத்து மீறி உள் நுழைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தலைமையிலான 30 பேர் கொண்ட அடியாட்களுடன் உள் நுழைந்து மேசையில் இருந்த பொருட்களை உடைத்து எறிந்து பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதில் இருவரும் காயமடைந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில் இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 12 பேரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கையினை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர் என பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து தலைமறைவாகிய இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவன் முன்னிலையில ஆஜர்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிசார் முன்னெடுத்துவருவதுடன் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு பாராளுமன்ற சபாநாயகரிடம் அனுமதியை பெறும் நடவடிக்கையின் முன்னெடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுற்றுலா நிதி முறைகேடு வழக்கு; பெசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சுற்றுலா நிதி முறைகேடு வழக்கு; பெசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

June 17, 2026
யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்
செய்திகள்

யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார்

June 17, 2026
இலங்கை இராணுவத்துக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இராணுவ பொருட்களை இலவசமாக வழங்கிய இந்தியா
செய்திகள்

இலங்கை இராணுவத்துக்கு 5.5 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இராணுவ பொருட்களை இலவசமாக வழங்கிய இந்தியா

June 17, 2026
ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதிகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதிகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

June 17, 2026
பூனாவை பகுதியில் கோர விபத்து; இரு மீனவர்கள் பலி, ஒருவர் கவலைக்கிடம்!
செய்திகள்

பூனாவை பகுதியில் கோர விபத்து; இரு மீனவர்கள் பலி, ஒருவர் கவலைக்கிடம்!

June 17, 2026
களுதாவளை ஆலய உற்சவத்தில் 50 கிலோ பழுதடைந்த பழங்கள் பறிமுதல்!
செய்திகள்

களுதாவளை ஆலய உற்சவத்தில் 50 கிலோ பழுதடைந்த பழங்கள் பறிமுதல்!

June 17, 2026
Next Post
சீனாவில் 1,400 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

சீனாவில் 1,400 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.