டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கான ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அடுத்த 4 மாதங்களுக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றித் தெரிவித்துள்ளார்.
அடுத்த 4 மாதங்களுக்கு 7 துறைகளுக்காக 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்குத் தற்போது 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி பற்றாக்குறையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சமூகத்தை அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது. டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கும், உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இந்த நிதி அவசியம் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.








