மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களை பரிசோதிக்க அவர்களுக்கு இருபத்தி நான்கு மணி நேர கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று மொட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த கூறுகிறார்.
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வால கார் விபத்து நடந்த நேரத்தில் அவர் மது அருந்தியிருந்தாரா என்பது குறித்த விசாரணையில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டது தொடர்பில் கருத்து வெளியிட அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் சபாநாயகர் ஒருவரால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து காவல்துறை ஊடகப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் மிகவும் உதவியற்றவராகத் தோன்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேசமயம் சப்புகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக உள்ளக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகனம் விபத்தின் பின்னர் பொலிஸார் செயற்பட்டமை தொடர்பாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் சட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதா, இல்லையா என்பதை விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சப்புகஸ்கந்த – தெனிமுல்ல சந்தியில் பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல செலுத்திய ஜீப் வாகனம் நேற்று முன்தினம்(11) மோட்டார் சைக்கிளில் மோதுண்டு பின்னர் எதிரே வந்த காரில் மோதி விபத்திற்குள்ளானது.
சம்பவத்தில் காரில் பயணித்த 6 மாத குழந்தை மற்றும் 02 பெண்கள் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக வீதி விபத்தை தடுக்கத் தவறியமை, கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியமை, காயம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நேற்று(12) கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.








