Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

7 months ago
in செய்திகள்

பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் என வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சம உரிமை இயக்கம் அவசர கடிதம் எழுதியுள்ளது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் இந்திரானந்த டி சில்வாவின் கையொப்பத்துடனான குறித்த கடிதம் இன்று திங்கட்கிழமை (15) ஜனாதிபதி செயலத்தில் சம உரிமை இயக்கத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டின் மக்கள் தொகையில் 25 சத வீதமானோர் தமிழ் மொழியை தமது தாய் மொழியாகக் கொண்டிருப்பதோடு நாட்டின் அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிவித்த சிங்களத்தை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாகக் கொண்ட கொள்கை இன்னும் யாதார்த்தமாக உள்ளது என்பது கவலைக்குரியதாக இருந்தாலும், நான் அதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இது ஒரு ஜனநாயக விரோத அரச கரும மொழிக் கொள்கையாகும், இது தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை நாட்டிலில் மீண்டும் மீண்டும் ஒதுக்கி வைக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் சில, நாடு முழுவதையும் பாதித்த அண்மைய பேரழிவுகளின் போது மொழிக் கொள்கை குறுகிய மனப்பான்மையோடு செயற்படுத்தப்பட்டமை ஆகும்.

  1. பேரிடர் தொடர்பான அரச அறிவிப்புகளை சிங்கள மொழியில் மட்டும் வெளியிடுதல்
  2. வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையின் அதிகாரப்பூர்வ வெளியீடு சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமை
  3. ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பான அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமை
  4. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, சிங்களத்தில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகின்றமை

மாவட்டச் செயலாளர் முதல் கிராம அலுவலர் வரை மேற்கூறிய பல அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே அனுப்பப்படுகின்றன. அது மட்டுமல்ல, அண்மையில், ஜனாதிபதியாக, இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களைத் தவிர்க்கும் வகையில், நீங்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றினீர்கள். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது கூட தனது உரையை தமிழில் மொழிபெயர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது.

ஜனாதிபதி அவர்களே, தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு மற்றும் மொழிபெயர்ப்பில் கூட அதன் பயன்பாட்டின் எளிமை இருந்தபோதிலும், “சிங்களம் மட்டும்” என்ற அதிகாரப்பூர்வ மொழிக் கொள்கை இன்னும் நடைமுறையில் உள்ளதோடு மக்கள் தங்கள் தாய்மொழியில் அரசுடன் தொடர்பு கொள்ளும் மனித மற்றும் ஜனநாயக உரிமைகளை அது அப்பட்டமாக மீறுகிறது. 30 ஆண்டுகால இனவாதப் போரைச் சந்தித்த ஒரு நாட்டிலேயே இதுபோன்ற ஒரு அதிகாரப்பூர்வ மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இந்தத் தருணத்தில் கூட, பேரிடர்களுக்கான இழப்பீடு தொடர்பான சுற்றறிக்கை சிங்களத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் கூகிள் மூலம் அந்த அறிவிப்புகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது சரியான செயன்முறை அல்ல என்பதைச் கூறத் தேவையில்லை.

இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை. நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சுற்றாடல் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. யாராவது ஒரு கட்டடம் கட்ட விரும்பினால், அந்த அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்தப் படிவம் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் தான் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகிரங்கமாகக் கூறிய கோத்தபய ராஜபக்சதான் இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை இன்னும் வகித்து வருகிறார் என்றிருந்தால், நாம் இந்த நிலையக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. தேசிய மக்கள் சக்தியின் முந்தைய தேர்தல் விஞ்ஞாபனங்களில், சிங்களவர்கள், தமிழ், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய அனைத்து மக்களும் தங்களுக்கு விருப்பமான மொழியில் அரசோடு தொடர்புகொள்ளும் உரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மூலம், இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். எனவே, இந்த நிலையை உடனடியாக மாற்றவும், அரச அறிவிப்புகளிலிருந்து பல்வேறு திணைக்களங்களால் வெளியிடப்படும் ஒவ்வொரு அறிவிப்பு வரையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவும், இந்த சமத்துவமற்ற நிலைமைகளை உடனடியாக மாற்றியமைக்கவும் சம உரிமை இயக்கம் உங்களை வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
செய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

July 25, 2026
700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்
செய்திகள்

700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்

July 25, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
Next Post
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.