Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் இலத்திரனியல் நீதிமன்றம்; அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் இலத்திரனியல் நீதிமன்றம்; அமைச்சரவை ஒப்புதல்

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை உத்தியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் உருமாற்றச் செயல்பாட்டின் ஆரம்ப கட்டமாக, தற்போது உயர் நீதிமன்றம் அதன் வழக்கு நிர்வாகத்திற்காக ஒரு இணையதளம் மற்றும் தொடர்புடைய மின்னணு முறைமையை (e-CMS) அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

உயர் நீதிமன்றத்திற்காக உருவாக்கப்பட்ட இணையதளம் மற்றும் e-CMS முறைமையை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிச் சேவை ஆணைக்குழு, நீதிபதிகள் நிறுவனம் உட்பட நாடு முழுவதும் பரவியுள்ள அனைத்து நீதி நிறுவனங்களுக்கும் மாற்றியமைத்து பயன்படுத்துவதே இ-நீதிமன்றம் திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் மூலம் தேசிய நீதித்துறை தரவு வலையமைப்பை (National Judicial Data Grid) ஸ்தாபிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், நாட்டில் நீண்டகாலமாக நீதித்துறை எதிர்கொள்ளும் வழக்கு தாமதங்கள், தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, மற்றும் நீதிக்கு காலந்தவறிய அணுகல் மற்றும் நடைமுறைச் செயல்திறன் இன்மை போன்ற சிக்கல்களைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், 2026-2030 அரச முதலீட்டுத் வேலைத்திட்டம் மற்றும் ‘கிளீன் ஶ்ரீலங்கா'(Clean Sri Lanka) உத்திகளுடன் இணங்கி, இ-நீதிமன்றம் திட்டத்தை திறம்படவும், வினைத்திறனாகவும் செயற்படுத்துவதற்காக, ‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, 150 மில்லியன் ரூபா நிதியை நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது
செய்திகள்

களு கங்கையில் சட்டவிரோத மாணிக்கக்கல், மணல் அகழ்வுக்கு அதிரடி முற்றுகை; 25 பேர் கைது

July 28, 2026
வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!
செய்திகள்

வன்னியின் பெருமையை உயர்த்திய பாபு மாஸ்டர்; 7ஆம் நிலைக் கறுப்புப்பட்டி அங்கீகாரம்!

July 28, 2026
மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!
செய்திகள்

மலேசியாவில் சிக்கிய இலங்கை போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபர்; ‘ரத்மலானே சைமா’ கைது!

July 28, 2026
சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!
செய்திகள்

சாய்ந்தமருதில் போலி உறுதி எழுதும் சட்டவிரோத இடங்கள்!

July 28, 2026
கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது
உலக செய்திகள்

கனடாவில் இந்திய வம்சாவளியினர் உட்பட 19 பேர் கைது

July 28, 2026
திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!
செய்திகள்

திராய்மடு ஸ்ரீ முருகன் ஆலயத்தின் 7ஆம் நாள் உற்சவம் பக்தி பூர்வமாக நடைபெற்றது!

July 28, 2026
Next Post
மதீஷ பத்திரனவை 18 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மதீஷ பத்திரனவை 18 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.