கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச்சோதனை நடவடிக்கையை அடுத்து மாவட்ட செயலகத்திற்கு சேவைகளைப் பெற வந்த மக்கள் மாவட்ட செயலகத்தை விட்டு வெளியேறவோ அல்லது வளாகத்திற்குள் நுழையவோ அனுமதிக்கப்படவில்லை என்பதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








