அரசியலமைப்பு பேரவை என்பது, 1972-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாகத் தோற்றுவிக்கல்பட்ட, 1978-ஆம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாக வலுப்படுத்தப்பட்ட நிர்வாகத்துறையிலான அரசியல் தலையீட்டினைக் குறைப்பதற்கான ஒரு கட்டமைப்பு.
நிர்வாகத்துறையில் உள்ள சில நிறுவனங்களுக்கான உயர் பதவிகளுக்கான நியமனங்கள் அப் பேரவையின் மூலமே மேற்கொள்ளப்படுகின்றது.
இப் பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர்; ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்று குடியியல் தலைவர்கள்.
ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களில், சிறுபான்மைக் கட்சிகள் அல்லது சிறிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் அக் கட்சிகளால் பிரேரிக்கப்பட்டு, நியமிக்கப்படுவார். அவ்வாறு நியமிக்கப்பட்டவர் தான் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞ்ஞானம் சிறிதரன்.

உயர் பதவிகளைத் தீர்மானிக்கின்ற சபையில், எண்ணிக்கை ரீதியில் நலிவடைந்திருக்கும் குழுக்களின் அபிலாசைகளுக்கு தளம் ஒன்றினை ஏற்படுத்தக்கூடும் வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே சிறுபான்மை/சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவப்படுத்தும் உருவாக்கப்பட்டது.
அவ்வாறு இருக்கும் போது சிறிதரன் அவர்கள் இழப்பீட்டிற்கான அலுவலகம் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகிய பதவிகளுக்கு தமிழ் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட இராணுவத்தினருக்கு வாக்களித்தது தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதாக அமைகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
இராணுவமயமாக்கலுக்கு எதிராக விடாது குரல் கொடுப்பவர் என்ற விம்பத்தினை உருவாக்கியுள்ள சிறிதரன், திரைமறைவில் இராணுவத்தினருக்கு வாக்களிப்பது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளினை வைத்து அரசியல் செய்யும் அவரது இரட்டைவேடத்தினைக் காட்டுகிறதா?








