நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் பணியாற்றி வந்த பி.வாகேஷன், கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர நேற்று (05) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்.
இவர், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் பணியாற்றி வந்த நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








