ல்முனையில் கடலரிப்பை தடுக்கும் நோக்கில் துரித நடவடிக்கை எடுக்கும் முகமாக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான வசந்த பியதிஸ்ஸ வழிகாட்டலில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவினர் நேற்று(12) கல்முனை கடற்கரை பிரதேசத்திற்கு கள விஜயம் மேற்கொண்டனர்.
இதன் போது கடலரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசலை அண்டியுள்ள பிரதேசம் மற்றும் கல்முனைக்குடியில் அமைந்துள்ள மஸ்ஜித்துல் ஃபலா பள்ளிவாசலை அண்டியுள்ள கடற்கரை பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டு களப் பரிசோதனைகளில் ஈடுபட்டனர்.
இதன் போது, கடலரிப்பை நிலையான அடிப்படையில் தடுப்பதற்கு மேலும் கற்களை போடும் வேலைத்திட்டத்தை விரைவில் மேற்கொள்ள துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.












