Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வசன அதிகாரத்தின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு தீ வைப்பு

சர்வசன அதிகாரத்தின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு தீ வைப்பு

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் ,தாவடி வீதியிலுள்ள சர்வசன அதிகாரம் கட்சியின் அலுவலகத்துக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் அருண் கூறியிருப்பதாவது,

238, K.K.S. வீதி, தாவடி, யாழ்ப்பாணம் என்ற விலாசத்தில் அமைந்துள்ள எனது வீடும் அலுவலகமும் உள்ள கட்டிடத்திற்கு, இனந்தெரியாத நபர்களால் திட்டமிட்ட வகையில் தீ வைக்கப்பட்டுள்ளதை, ஜனநாயகத்தை மதிக்கும் இந்நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தீவைப்பு சம்பவம் நேற்று இரவு (13/01/2026) சுமார் 11:40 முதல் 11:50 மணிக்குள் இடம்பெற்றுள்ளது.

என்னை மௌனமாக்கும் நோக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் கொலை மிரட்டல் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதலை நான் கருதுகிறேன். இது தனிப்பட்ட சம்பவமல்ல; கருத்துச் சுதந்திரத்திற்கெதிரான நேரடி தாக்குதல் ஆகும்.

நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவது போல, ஆயுதங்களுக்கும், வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் அடிபணியும் கோழை நான் அல்ல. அச்சுறுத்தல்களாலும், கொலை முயற்சிகளாலும் எனது குரலை அடக்க முடியாது.

எனது கருத்தே நான். எனது கருத்துச் சுதந்திரம் என் உயிரைவிடப் பெறுமதியானது.

எனது கருத்துச் சுதந்திரத்திற்காக மட்டுமல்ல; இந்த நாட்டின் கடைசி குடிமகனின் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக நான் என் உயிரையும் தியாகம் செய்யத் தயார்.

இந்த தாக்குதலின் மூலம் என்னை மௌனமாக்க முடியும் என எண்ணும் சகல வன்முறையாளர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும், அது ஒருபோதும் சாத்தியமில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவம் குறித்து உடனடி, நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டியது தொடர்புடைய அதிகாரிகளின் கடமை என்பதையும் இவ்வேளையில் வலியுறுத்துகிறேன்.- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!
செய்திகள்

ஆசனப் பட்டி இல்லாத வாகனங்களுக்கு 3 மாத அவகாசம்!

June 20, 2026
திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!
செய்திகள்

திக்கோடையில் மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு; வயல் உரிமையாளர் கைது!

June 20, 2026
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

June 20, 2026
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது
செய்திகள்

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது

June 20, 2026
O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை
செய்திகள்

O/L பரீட்சையில் 100% சித்தி பெற்று அடாவத்தை திருமகள் தமிழ் வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை

June 20, 2026
காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு
செய்திகள்

காணாமற்போனவர்கள் விவகாரம்; 7,000க்கும் மேற்பட்டோரின் அடிப்படை தகவல்கள் சேகரிப்பு

June 20, 2026
Next Post
ஏப்ரலில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்

ஏப்ரலில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.