இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அனுமதியில்லாமல் ரூ.34 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 390 தொலைபேசிகளை கடத்த முயன்றவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடையைச் சேர்ந்த 45 வயதுடைய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.








