வடமத்திய மாகாண கல்வித் துறையினரால் வெளியிடப்பட்ட 5ம் தர மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகளில் தமிழ் தவறாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அறிக்கைகளில், அட்டைப் படத்தில் உள்ள எழுத்துப்பிழைகள் மற்றும் உள்ளடக்கத்தின் சரியான அமைப்பு முழுமையாக சரிபார்க்கப்படவில்லை. குறிப்பாக, ஓரிரு எழுத்துப் பிழைகள் இருந்தால் புறக்கணிக்கலாம் ஆனால் முழு உள்ளடக்கம் பிழையாக இருந்தால் மாணவர்களின் மதிப்பீடுகள் பாதிக்கப்படக்கூடும்.
மேலும், சில தகவல்கள் கூகிள் மூலமாக மொழி மாற்றம் செய்து, உரியவர்கள் சரிபார்க்காமல் தமிழ் மொழியை மட்டும் பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் ஏற்கனவே அச்சிடப்பட்ட 06 ஆம்தர ஆங்கில புத்தகத்தில் பாலியலை தூண்டும் இணையதள முகவரி இணைக்கப்பட்டு அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இவ்வாறு தமிழ் எழுத்துப்பிழையுடன் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கை அச்சிடப்பட்டிருப்பது மக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
இது தொடர்பான விடயத்தை அரசதரப்பு ஆராய்ந்து மக்களுக்கு விளக்கமளிக்கவேண்டும் என தமிழ் பற்றாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.








