Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடமராட்சி கிழக்கில் போக்குவரத்து சீரின்மை; மாணவர்கள், ஊழியர்கள் தொடர்ச்சியாக பாதிப்பு

வடமராட்சி கிழக்கில் போக்குவரத்து சீரின்மை; மாணவர்கள், ஊழியர்கள் தொடர்ச்சியாக பாதிப்பு

6 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்குவரத்து சீரின்மை தொடர்பாக பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுகொண்டிருக்கின்றனர்.

அண்மையில் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள் மருதங்கேணிவரை நடந்து சென்றுள்ளனர்.

பருத்தித்துறை கேவில் வரை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் எந்தவித பொறுப்புணர்வுமின்றி தாம் நினைத்த நேரத்திற்கு புறப்படுவதும், சென்றடைவதாலும் மாணவர்கள் ஊழியர்கள், பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

குறிப்பாக கட்டைக்காட்டிலிருந்து பருத்தித்துறை வரை பாடசாலை சேவைக்காக ஈடுபடும் அரச பேருந்துகள் வடமராட்சியின் பிரபல பாடசாலைகளை சென்றடைய காலை 7:50 நிமிடம் ஆகுகின்றது. இதனால் நாளாந்தம் அரைமணி நேரம் மாணவர்கள் தாமதித்து செல்வதுடன் மந்திகை மருத்துவமனை உட்பட பல அரச ஊழியர்கள் தமது கடமைக்கு நேரத்திற்கு செல்ல முடியயாமல் தினமும் பாதிப்படைகின்றனர்.

இதேவேளை பருத்தித்துறையிலிருந்து கேவில் வரை நீண்ட நேர இடைவெளிக்கொரு பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றன. குறிப்பாக பருத்தித்துறை கேவில் பேருந்து சேவை பிற்பகல் 2:15 க்கு பின்னர் 6:20 மணிக்கே பருத்தித்துறையிலிருந்து கேவிலுக்கான சேவையில் ஈடுபடுகின்றது.

இதனால் பல மாணவர்கள் பலமணி நேரமாக வீதிகளில் காத்திருக்கின்றனர். பருத்தித்துறை வவுனியா பேருந்து சேவை, இரவு 8:30மணிக்கு இடம்பெறும் பருத்தித்துறை மருதங்கேணி ஊடான கொழும்பு பேருந்து சேவை என்பனவும் 5 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கேவில் பேருந்து சேவை கேவிலுக்கு செல்லாது கட்டைக்காடு கிராமத்துடன் நிறுத்தப்படுவதனால் 5 km தூரம் வரை கேவிலுக்கு மாணவர்கள் உட்பட பயணிகள் இரவிரவாக நடந்து செல்கின்றனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பெரிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு ஒருங்கிணைப்பு குழு தலைவரால் இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமை யாளருக்கு அறிவுறுத்தப்பட்டும் சிறிய பேருந்துகளே சேவையில் ஈடுபடுகின்றன.

இதேவேளை தனியார் பேருந்து சேவைகள் எந்தவித பொறுப்புணர்வுமின்றி தாம் நினைத்த நேரம் சேவையில் ஈடுபடுவதும், நினைத்த நேரம் சேவையை நிறுத்துவதும் வழமையாகவுள்ளது.

தனியார் பேருந்து சேவை வழங்குனர்கள் தமக்கு உரிய வருமானம் இன்மையை காரணம் காட்டி சேவையை இடைநடுவில் நிறுத்துகின்றனர். அவர்களை கட்டுப்படுத்தும் தனியார் போக்குவரத்து அதிகார சபையிடம் முறைப்பாடு செய்தும் அவர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

நாகர் கோவில் பருத்தித்துறை தனியார் பேருந்து சேவை குறித்த சேவை வழங்குனரால் பல வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒருங்கிணைப்பு தலைவராக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் பருத்தித்துறை நகரசபையின் தீர்மானங்களை நிறுத்துமாறு கடிதம் அனுப்புவதும், நகரசபைக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என பொங்கி எழும் ரஜீவன் எம்பி அவரது அரசாங்கத்தின் கீழேயுள்ள இலங்கை போக்கவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து அதிகார சபைகளுக்கு நடவடிக்கை எடுக்க அவரால் முடிவதில்லை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் பருத்தித்துறை 750 வழித்தட பேருந்து சேவை மிக சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
கல்விச் சீர்திருத்தங்களை அநுரவே ஒத்திவைத்தார்; சஜித் பிரேமதாச

கல்விச் சீர்திருத்தங்களை அநுரவே ஒத்திவைத்தார்; சஜித் பிரேமதாச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.