இலங்கை கடற்படை மன்னார் மீன்வள ஆய்வாளருடன் இணைந்து 2026 ஜனவரி 25 ஆம் திகதி தலைமன்னார், இருக்கலம்பிட்டி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது, அங்கீகரிக்கப்பட்ட சட்ட வரம்பை மீறி ஆயிரத்து நூற்று ஐம்பத்தெட்டு (1158) சங்குகளை சேமித்து வைத்திருந்த நபர் ஒருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
அதன்படி, மன்னார் மீன்வள ஆய்வு அலுவலகத்துடன் இணைந்து வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையின்போது, அப்பகுதியில் உள்ள ஒரு சந்தேகத்திற்கிடமான வீட்டை சோதனையிட்டனர்.
அங்கு, வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த, 70மிமீ சுற்றளவு சட்டப்பூர்வ வரம்பை பூர்த்தி செய்யாத சுமார் ஆயிரத்து நூற்று ஐம்பத்தெட்டு (1158) சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார், இருக்கலம்பிட்டியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், மேலும் குறித்த சந்தேக நபரும், சங்குகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.








