Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு பாராட்டு விழாக்கள்; அரசு மீது ஜோசப் ஸ்டாலின் அதிருப்தி

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு பாராட்டு விழாக்கள்; அரசு மீது ஜோசப் ஸ்டாலின் அதிருப்தி

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாணவர்களிடம் பணத்தை அறவிட்டு அவர்களுக்கே பாராட்டு விழாக்களை நடத்தும் வழக்கம் கடந்த ஆட்சி காலத்தில் தாராளமாக இடம்பெற்றது. நாம் அதற்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தோம். ஆனால் தற்போதைய அரசாங்கத்திலும் இவ்வாறான சம்பவங்கள் எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றன என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வுகளே அதிகம் இடம்பெற்று வருகின்றன.

இதற்கு பாடசாலை சமூகமானது பெற்றோர்களை அழைத்து கதைத்து இந்நிகழ்வை பெற்றோர்களே செய்வது போன்ற போர்வையில் தாமே முன்னின்று சகல விடயங்களையும் கையாள்கின்றனர். எந்த இடத்திலும் பாடசாலையை சம்பந்தப்படுத்தாது பெற்றோர்களின் வங்கி கணக்கிலக்கங்களை வழங்கி அதில் பணத்தை சேகரித்து நிகழ்வை ஏற்பாடு செய்கின்றனர். இதற்காக இவர்கள் வாட்ஸ்அப் குழுவையும் வைத்துக்கொள்கின்றனர்.

இதில் என்ன ஆச்சரியமான சம்பவம் என்றால் இவ்வாறான நிகழ்வுகளின் பின்புலம் அறிந்து கல்வி அதிகாரிகளே நிகழ்வின் பிரதம அதிதிகளாகவும் சிறப்பதிதிகளாகவும் கலந்து கொள்கின்றனர். தரம் ஒன்று, சாதாரண தரம் மற்றும் உயர்தரத்துக்கு பெருந்தொகை பணத்தை அறவிட்டு சில பிரபல பாடசாலைகள் வெளிமாணவர்களை சேர்த்துக்கொள்கின்றன.

சில பாடசாலைகளில் ஆசிரியர்களே பெற்றோர்களாக இருப்பதால் அது குறித்து அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் கல்வி மறுசீரமைப்பை கொண்டு வருவதிலும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் முன்னிற்கும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியிலும் இவ்வாறு அப்பாவி பெற்றோர்களிடம் பணத்தைப் பெற்று பாராட்டு விழாக்களை இடம்பெறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? மேலும் இந்த மாணவர்களில் தித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கும் போது கல்லூரி நிர்வாகங்கள் இப்படி ஈவிரக்கமின்றி நடந்து கொள்ளக் கூடாது. இப்படி பாராட்டு விழாக்களை நடத்தும் கல்லூரிகளை இனம் கண்டு நிகழ்வின் செலவீனங்கள் மற்றும் நிதி சேகரிப்பு குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் நாம் உயர்கல்வி மற்றும் மாகாண கல்வி அமைச்சுக்கு அழுத்தங்களை வழங்குவோம் எனத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
கொழும்பில் உள்ள 60 சதவீதமான சாரதிகள் போதைக்கு அடிமை; பிமல் ரத்நாயக்க

கொழும்பில் உள்ள 60 சதவீதமான சாரதிகள் போதைக்கு அடிமை; பிமல் ரத்நாயக்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.