எமது பிரதேச மாணவர்களுக்கான ‘சுரக்சா’ காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு காப்புறுதி சேவைகளை வழங்கும் நோக்குடன், இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் வாழைச்சேனை கிளையை நேற்று (03) திறந்து வைத்தது.
வாழைச்சேனை பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள இக்கிளை, கிளைப் பொறுப்பாளர் நடேசன் காண்டீபன் தலைமையில், நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளர் ஜெகத் வெல்லாகம அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், வடகிழக்கு மண்டல பொறுப்பாளர் சத்தியன், கிழக்கு பிராந்திய பொறுப்பாளர் புவனேந்திரன், மட்டக்களப்பு கிளையின் பிரதான முகாமையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இலங்கை வங்கியின் வாழைச்சேனை முகாமையாளர், பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் டிலக்ஷன், மதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், தனியார் நிறுவனங்களின் முகாமையாளர்கள், காப்புறுதி நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.












