டிட்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்காத அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது வெட்கக் கேடான செயற்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர தினத்தில் கடனுக்கு கொள்வனவு செய்த யுத்த உபகரணங்களை காட்சிப்படுத்த முடியாது என்று தெரிவித்திருந்தனர்.
அது அபிமானத்திற்குரிய செயற்பாடல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தினர் யுத்த உபகரணங்களுடன் ஊர்வலம் வரும் போது தான் அவர்களுக்கு அபிமானம் உள்ளது.
அதேநேரம், இராணுவத்தினர் செய்த தியாகங்கள் காரணமாகவே, இன்று உறுப்பினர்கள் நாற்காலிகளில் அமர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினரின் தியாகம் பற்றி பேசுவதற்கு தைரியமில்லாத, இந்த அரசாங்கம் வெட்கமடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய கடற்படையினர் தங்கள் கடல் எல்லைக்குள் நுழைந்து இலங்கை கடற்றொழிலாளர்களை தாக்கியுள்ள போதிலும் இதுவரை அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி சுட்டிக்காட்டியுள்ளார்.








