Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்; 17 வயது இளைஞன் உயிரிழப்பு

யாழில் வேன் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்; 17 வயது இளைஞன் உயிரிழப்பு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், வேலணை – அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இன்று (10) அதிகாலை சுமார் 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த சந்தேகத்திற்கிடமான ‘ஹயஸ்’ ரக வாகனம் ஒன்றை பொலிஸார் மறித்துள்ளனர்.

பொலிஸாரின் கட்டளையை மீறி அந்த வாகனம் நிற்காமல் சென்றதுடன், திடீரென மீண்டும் திரும்பி கடமையில் இருந்த பொலிஸாரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளது.

இதனால் சுதாகரித்துக்கொண்ட பொலிஸார், தற்காப்புக்காகவும் வாகனத்தை நிறுத்தவும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகின்றுது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் வாகனத்தில் பயணித்த வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது இளைஞன் தலையில் படுகாயமடைந்தார்.

பொலிஸார் உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் போது குறித்த ஹயஸ் வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனைத் தவிர, ஏனைய இருவரையும் பொலிஸார் அதே இடத்தில் வைத்து மடக்கிப்பிடித்தனர்.

பிடிபட்ட இருவரிடமும் ஊர்காவற்றுறை பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வாகனம் எதற்காக நள்ளிரவில் அங்கு வந்தது? சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்டதா? அல்லது வேறு ஏதேனும் திட்டமா? என்ற கோணத்தில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

June 17, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

June 17, 2026
ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!
செய்திகள்

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

June 17, 2026
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த
செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
Next Post
திஹாரி மத்ரசா பட்டமளிப்பில் நாமல் ராஜபக்ஷ அழைப்பு; கண்டனம் வெளியிட்ட இலங்கை உலமா கட்சி

திஹாரி மத்ரசா பட்டமளிப்பில் நாமல் ராஜபக்ஷ அழைப்பு; கண்டனம் வெளியிட்ட இலங்கை உலமா கட்சி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.