Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்; பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி

இந்தியாவுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்; பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி

6 months ago
in செய்திகள்

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தொடரின் இணை நடத்துனர் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் (ICC) இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இலங்கை தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

அத்துடன், 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை இலங்கை இன்னும் மறக்கவில்லை என்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியிருந்தது.

அட்டவணைப்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி இந்திய அணியுடன் நடைபெறவுள்ள போட்டியில் களமிறங்குமாறு தேசிய கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டின் உன்னதத்தைப் பாதுகாக்கவும், இந்த உலகளாவிய விளையாட்டைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் ஆதரவளிக்கும் நோக்குடனும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இது குறித்துப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டியைப் புறக்கணிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசாங்கம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், இந்தியாவுடனான போட்டி குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு இடையே நேற்று (09) மாலை விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, இந்தியாவுடன் நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் பங்கேற்கச் செய்யுமாறு ஜனாதிபதி பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கை பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகை தந்து இந்நாட்டு கிரிக்கெட் விளையாட்டைப் பாதுகாக்க வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மற்றனைத்து விடயங்களையும் விட மேலானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தச் சுமூகமான கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாகவும், இலங்கையிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஆதரவுக்குத் தனது நன்றியைத் தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதன்போது தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்
அரசியல்

‘ஏக்கிய இராஜ்ய’ அரசியல் அமைப்பை கொண்டுவரும் முயற்சியை தமிழர்கள் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

August 4, 2026
மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
செய்திகள்

மகிந்தவின் மகன் யோசிதவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

August 4, 2026
ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!
செய்திகள்

ட்ரம்பின் சமாதான முயற்சிக்கு ஈரான் பதிலடி; பேச்சுவார்த்தை இல்லை என அறிவிப்பு!

August 4, 2026
60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!
செய்திகள்

60 வயது பூர்த்தியான பொலிஸ் அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு!

August 4, 2026
சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!
உலக செய்திகள்

சர்ச்சை பேச்சு விவகாரம்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

August 4, 2026
இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
உலக செய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

August 4, 2026
Next Post
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகள்; இளைஞன் ஒருவன் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட அலங்கார பூச்செடிகள்; இளைஞன் ஒருவன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.