நீண்டகாலமாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இதுவரை நேர ஒழுங்கு இன்றி இயக்கப்பட்டு வந்த காங்கேயனோடை – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான பேருந்து சேவை, இன்று முதல் முறையான நேர ஒழுங்குடன் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி போக்குவரத்து சபையின் முகாமையாளர் உவைஸ் அவர்கள் உறுதிப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இச் சேவையை நடைமுறைப்படுத்தியமைக்காக காத்தான்குடி போக்குவரத்து சபையின் முகாமையாளர் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தனது நன்றியை தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இப் பேருந்து சேவை எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியாகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டுமென அவர் ஆலோசனையும் வழங்கினார்.








