Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு வீட்டு விலை மாபியாவைத் தடுக்கும் புதிய ஒழுங்குமுறை; அரசு திட்டம்

கொழும்பு வீட்டு விலை மாபியாவைத் தடுக்கும் புதிய ஒழுங்குமுறை; அரசு திட்டம்

4 months ago
in செய்திகள்

இலங்கையில் காணி மற்றும் வீடுகளின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதைத் தடுப்பதற்கும், இந்தத் துறையில் நிலவும் விலை மாபியாக்களை ஒடுக்குவதற்கும் புதிய ஒழுங்குமுறை அமைப்பொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை காணி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து முன்னெடுக்கத் தயாராக உள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு இணங்க, காணி மற்றும் வீட்டுத் திட்டங்களின் விலைகளைக் கண்காணிப்பதற்கான ஒரு ஒழுங்குமுறை அமைப்பு நாட்டின் எதிர்காலத்திற்கு மிக அவசியமானது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்தார்.

முன்னதாக இது குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர,

முறையான ஒழுங்குமுறை அமைப்பு இல்லாததால் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், இதனை ஒரு மாபியா எனக் கருதலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

2022 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் சொத்துச் சந்தையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால், சாதாரண மக்கள் ஒரு வீட்டினை வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச சுட்டெண்ணின் படி, உலகிலேயே வீடு வாங்குவதற்குச் செலவு கூடிய நகரங்களின் பட்டியலில் கொழும்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கொழும்பில் ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கு, ஒரு குடும்பம் தனது முழு வருமானத்தையும் எவ்வித செலவுமின்றி சுமார் 55 ஆண்டுகள் சேமிக்க வேண்டியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அசாதாரண விலை உயர்வைத் தடுத்து, சாதாரண மக்களும் வீட்டு உரிமையாளர்களாவதை உறுதிப்படுத்தவே இந்த புதிய சட்டச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!
செய்திகள்

50 ஆண்டுகளாக தொடரும் உரிமைப் போராட்டம்; தீர்வு இல்லை என குற்றச்சாட்டு!

June 9, 2026
கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை
செய்திகள்

கல்முனை வலய மட்ட செஸ் போட்டியில் சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்கள் அசத்தல் சாதனை

June 9, 2026
எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!
செய்திகள்

எரிபொருளுடன் மேலும் இரு கப்பல்கள் இலங்கைக்கு; விநியோகத்திற்கு வலுசேர்ப்பு!

June 9, 2026
Next Post
ஆலையடிவேம்பில் 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பதிவாளர் கைது

ஆலையடிவேம்பில் 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பதிவாளர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.