இலங்கை கடற்படை, கடலோர பொலிஸ்படை திணைக்களத்துடன் இணைந்து, 2026 பிப்ரவரி 21ஆம் திகதி சிலாபம் மற்றும் தொடுவாவ கடல் பகுதிகளில் ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதன்போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த மற்றும் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தொள்ளாயிரத்து தொன்னூற்று இரண்டு (992) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், ஒரு தொகை பூச்சிக்கொல்லிகள், இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு டிங்கி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.
அதன்படி, சிலாபம் மற்றும் தொடுவாவ கடல் பகுதிகளில் கடலோர பொலிஸ்படை திணைக்களத்துடன் இணைந்து வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது, குறிப்பிட்ட கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த இருபத்தைந்து பீடி இலைகள் பைகள், 14 சிகரெட் பெட்டிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அடங்கிய ஒரு பெட்டி ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, தொள்ளாயிரத்து தொன்னூற்று இரண்டு (992) கிலோகிராம் பீடி இலைகள், ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் (140,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், ஒரு தொகை பூச்சிக்கொல்லிகள், இரண்டு சந்தேக நபர்கள் மற்றும் ஒரு டிங்கி படகு ஆகியன கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் அந்த சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாபம் கலால் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.








