Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிரிழந்த பெண்ணின் கருப்பையைத் தானமாகப் பெற்று பிரித்தானியாவில் முதல் குழந்தை பிறப்பு!

உயிரிழந்த பெண்ணின் கருப்பையைத் தானமாகப் பெற்று பிரித்தானியாவில் முதல் குழந்தை பிறப்பு!

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மருத்துவத் துறையில் ஒரு புதிய வரலாற்றைப் படைக்கும் வகையில், உயிரிழந்த பெண்ணிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பையைப் பொருத்தி, அதன் மூலம் பிரித்தானியாவில் முதல் முறையாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

லண்டனில் உள்ள குயீன் சார்லோட்ஸ் மற்றும் செல்சியா வைத்தியசாலையில் கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. இந்த குழந்தை 3.1 கிலோ கிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.

குழந்தையின் தாயான 30 வயதுடைய கிரேஸ் பெல், பிறப்பிலேயே ‘MRKH’ எனும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டவர். இதனால் அவருக்குக் கருப்பை வளர்ச்சி அடையவில்லை.

“இது ஒரு நிஜமான அதிசயம். என்னால் ஒருபோதும் தாயாக முடியும் என்று நான் நினைத்ததே இல்லை. இப்போது நான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறேன்,” என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கிரேஸின் கணவர் ஸ்டீவ் பவல், தனது மனைவியின் இந்த நீண்ட காலப் போராட்டத்தில் உறுதுணையாக இருந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணொருவரின் கருப்பை கிரேஸிற்குப் பொருத்தப்பட்டது. அந்தக் கொடையாளியின் மூலம் கருப்பை மட்டுமல்லாது, மேலும் 05 உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 4 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

“தனது மகளை இழந்த துயரம் எங்களை வாட்டினாலும், அவளது கடைசி ஆசை ஒருவருக்கு உயிர் கொடுப்பதாக அமைந்தது எங்களுக்குச் சற்று ஆறுதலைத் தருகிறது,” எனத் தானம் வழங்கிய பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து கருப்பையைப் பெற்று பிரித்தானியாவில் ஏற்கனவே குழந்தை பிறந்துள்ளது. ஆனால், உயிரிழந்தவரிடம் இருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் குழந்தை பிறப்பது இதுவே முதல் முறையாகும்.

ஐரோப்பாவிலேயே இத்தகைய முறையில் குழந்தை பிறப்பது இது மூன்றாவது முறையாகும்.

இந்த வெற்றி, கருப்பை இன்றித் தவிக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பயனாளிகளைத் தெரிவு செய்து அந்தப் பட்டியலை வெளியிட்டதும், அவர்கள் நிதியைப் பெறுவதற்கு வங்கி கணக்கைத் திறக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரதேச செயலகம் பயனாளிகளுக்கு ஒரு கடிதத்தை வழங்கும். அவர்கள் அந்த கடிதத்துடன் வங்கிக்குச் சென்று தெரிவு செய்யப்பட்ட அரச வங்கிகளில் ‘அஸ்வெசும’ கணக்காக (பூச்சிய மீதி கணக்கு – Zero-balance account) அதனைத் திறக்க வேண்டும்.

ஆரம்பத்தில் சுமார் ஒரு இலட்சம் பயனாளிகள் வங்கி கணக்கு இன்றி இருந்தனர். எனினும் தற்போது அந்த எண்ணிக்கையை குறைத்துள்ளோம்.

ஆனால் இன்னும் கணக்கு இல்லாதவர்கள் அல்லது தாம் இந்த நன்மையைப் பெற தகுதி பெற்றுள்ளோம் என்பதை அறியாதுள்ளனர். அவர்களுக்கு நாம் கடிதங்கள், குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளோம், ஆனால் செய்தி அவர்களைச் சென்றடையவில்லை என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!
செய்திகள்

மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!

July 23, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!
செய்திகள்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!

July 23, 2026
Next Post
டெய்சி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

டெய்சி ஃபொரஸ்ட்டை வழக்கிலிருந்து விடுதலை செய்ய கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.