அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் 46 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் தெரிவிப்பதாவது, குறித்த பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகாத 46 வயதுடைய ஆண் ஒருவர் நீண்டகாலமாக தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட யுவதி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை நேற்று (26) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளில், அவர் நீண்டகாலமாக அப்பகுதியில் பல பெண்களுக்கும் இதேபோன்ற பாலியல் தொந்தரவுகளை வழங்கி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.








