Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

அவசரகால நிலையை நீடித்து வர்த்தமானி வௌியீடு

6 months ago
in செய்திகள்

புதிய இணைப்பு

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இணைப்பு

மக்கள் அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (02) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான பிரேரணையை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கேள்வி: பெப்ரவரி 28ஆம் திகதிக்குப் பின்னர் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படவில்லை. அதனுடன் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது குறித்துக் கவனம் செலுத்தப்பட்டுள்ளதா?

நளிந்த ஜயதிஸ்ஸ: நிச்சயமாக.

கேள்வி: திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லையா? அது எப்போது?

நளிந்த ஜயதிஸ்ஸ: அது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவே உத்தேசித்துள்ளோம்.

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைத் தொடர்ந்தே நாட்டில் மக்கள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கமைய, குறித்த அவசரகால நிலை கடந்த 28ஆம் திகதியுடன் நிறைவடைந்ததுடன், அது மேலும் நீடிக்கப்படவில்லை. இதன் காரணமாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரின் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், மக்கள் தற்போது அநாவசியமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
Next Post
மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்; ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவு!

மத்திய கிழக்கு பதற்றம் தீவிரம்; ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.