இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியன்று ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்ள ஆரம்பித்தது.
காமோனி உட்பட ஈரான் தலைவர்களை கொன்ற ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury)யின் ஒரு பகுதியாக தெற்கு ஈரானின் ஹார்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரிலுள்ள பெண்கள் ஆரம்பப் பாடசாலை மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதில் சுமார் 165 மாணவிகள் மற்றும் ஊழியர்கள், சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.







மேலும் 100 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
எனவே உயிரிழந்த பாடசாலை மாணவிகளுக்கு நேற்று (03) இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








