மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை பகுதியில் 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இளம்பெண்ணுக்கு கடந்த 16ஆம் திகதி மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் பெற்றோரின் ஆசியுடன் திருமணம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், திருமணம் நடைபெற்று மூன்று நாட்களிலேயே அவர் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழப்புக்கான காரணம் தொடர்பான உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், பொலிஸ் விசாரணைகளின் நிறைவிலேயே சம்பவத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.







