மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் வீதம் வெகுவாக குறைவடைந்துள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.
தொடர்ச்சியான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்கீழ் இன்று (04) காலை மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் சுகாதாரத் திணைக்களம், மட்டக்களப்பு மாநகர சபை,இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் , பொது சுகாதார பரிசோதர்கள் இணைந்து மேற்கொண்ட பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின்போது 870 வீடுகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன இதில் 370 இடங்களில் இடங்கள் டெங்கு பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டதுடன் 109 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.







குறித்த இடங்கள் உடனடியாக தூய்மைப்படுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததுடன் தூய்மைப்படுத்தப்படாத இடங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
15 குழுக்களாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்ட பொதுச் சுகாதார பரிசோதர்கள் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது








