இலங்கை திருநாட்டின் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள பேத்தாழை கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 2026ஆம் ஆண்டு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டிற்கான மஹோற்சவ திருவிழா 23 மார்ச் 2026 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு சிறப்பு திருவிழாக்களுடன் நடைபெறவுள்ளது.

திருவிழா நிகழ்ச்சிகள் பின்வருமாறு நடைபெறும்:
23.03.2026 – திங்கட்கிழமை: கொடியேற்றம்
29.03.2026 – ஞாயிற்றுக்கிழமை: திரிசூல வேட்டைத்திருவிழா
30.03.2026 – திங்கட்கிழமை: சப்பரத்திருவிழா
31.03.2026 – செவ்வாய்க்கிழமை: இரதோற்சவம் / தேர்த்திருவிழா
01.04.2026 – புதன்கிழமை: தீர்த்தோற்சவம்
02.04.2026 – வியாழக்கிழமை (மாலை): திருக்கல்யாணம்
கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த மஹோற்சவ காலப்பகுதியில் தினமும் ஆலயத்தில் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறும்.
எனவே உலகம் முழுவதும் வாழும் பக்த மெய்யடியார்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்து கொண்டு இறைவனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாக சபையினர் அன்புடன் அழைக்கின்றனர்.








