அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுகின்றன என சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகப் போரை நிறுத்துமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களின் மூலம் அவர்களும் ஈரானைப் போலவே சர்வதேச சட்டத்தை மீறியுள்ளனர் என்று பிபிஸ்டர் மேலும் தெரிவித்துள்ளார்.
வலிமையானவர்களின் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும் உலகுக்குள் நாம் தள்ளப்படும் அபாயத்தில் இருக்கிறோம்.
மேலும் ஈரான் மீதான குண்டுவீச்சுக்கள் பொறுப்பற்றது மற்றும் சட்டவிரோதமானது என ஸ்பெயினும் கண்டித்துள்ளது.








