இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெரி கேர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இரண்டு வருட கால ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் உலகக்கிண்ண கிரிக்கெட் கிண்ணத்தை இந்திய அணி சுவீகரித்தது. அந்த அணியின் அப்போதைய பயிற்றுவிப்பாளராக கெரி கேர்ஸ்டன் செயற்பட்டிருந்தார்.
அத்தோடு, அந்த அணி ஒருநாள், இருபதுக்கு இருபது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதற்தர அணியாக செயற்பட அவரது ஒத்துழைப்பு இன்றியமையாததாகவிருந்தது.
இலங்கை அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்த சனத் ஜெயசூரியவின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், இந்த புதிய தெரிவு இடம்பெற்றுள்ளது.








