Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டில் எதிர்ப்பு காட்டிய ஈரான் வீராங்கனைகள்; அவுஸ்திரேலியா புகலிடம் வழங்கியது!

நாட்டில் எதிர்ப்பு காட்டிய ஈரான் வீராங்கனைகள்; அவுஸ்திரேலியா புகலிடம் வழங்கியது!

4 hours ago
in செய்திகள்

தமது நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தைப் பாட மறுத்த ஈரான் தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் ஐந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா மனிதாபிமான விசா வழங்கியுள்ளது.

தமது நாட்டில் ஏற்படக்கூடிய அரசியல் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த வீராங்கனைகள் அரசியல் புகலிடம் கோரியிருந்தனர்.

அவுஸ்திரேலியப் பிரதமர் எண்டனி எல்பானீஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆசியக் கிண்ணக் கால்பந்தாட்ட தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த ஈரான் மகளிர் அணி, தென் கொரியாவுக்கு எதிரான போட்டியின் போது ஈரான் தேசிய கீதத்தைப் பாடுவதைத் தவிர்த்தது.

இது ஈரான் அரசுக்கு ஆதரவான ஊடகங்களால் “அவமரியாதையான செயல்” என விமர்சிக்கப்பட்ட நிலையில், வீராங்கனைகளின் பாதுகாப்பு குறித்து சர்வதேச கவனம் திரும்பியது.

அவுஸ்திரேலியாவினால் பாதுகாப்பு வழங்கப்பட்ட வீராங்கனைகள்:

சாரா சர்பாலி அலிஷா (Zahra Sarbali Alishah)

மோனா ஹமூதி (Mona Hamoudi)

சாரா கன்பாரி (Zahra Ghanbari)

பாத்திமா பசந்திதே (Fatemeh Pasandideh)

அத்தேபே ரமசானிசாதே (Atefeh Ramezanizadeh)

இந்த வீராங்கனைகள் மீண்டும் ஈரானுக்கு நாடுகடத்தப்பட்டால் அவர்கள் கொல்லப்படக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலியப் பிரதமருடனான பேச்சுவார்த்தையின் பின்னர், அவுஸ்திரேலியா இந்த “உணர்திறன் மிக்க சூழலை” மிகச் சிறப்பாகக் கையாளுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த துணிச்சலான பெண்களின் நிலை குறித்து அவுஸ்திரேலியர்கள் அதிர்ச்சியடைந்ததாகவும், அவர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்றும் பிரதமர் எல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

அணியின் ஏனைய வீராங்கனைகளுக்கும் அவுஸ்திரேலியாவின் ஆதரவு திறந்த நிலையில் உள்ள போதிலும், ஈரானில் உள்ள தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் காரணமாக சில வீராங்கனைகள் மீண்டும் தாய்நாடு திரும்ப முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸிடம் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறிய ஈரான் அணியின் ஏனைய உறுப்பினர்கள் டுபாய் ஊடாக நாடு திரும்ப முயன்ற போதிலும், ஐக்கிய அரபு இராச்சியம் அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிகிறது.

அதன்படி அவர்கள் துருக்கி அல்லது மலேசியா ஊடாக மீண்டும் ஈரானுக்குச் செல்லவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

ஐந்து வீராங்கனைகளுக்குப் புகலிடம் அளித்தது சாதகமான நடவடிக்கை என்றாலும், எஞ்சிய வீராங்கனைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பு குறித்து இன்னும் பலத்த சந்தேகம் நிலவுவதாக உலகளாவிய வீரர்கள் சங்கமான FIFPRO தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இணையம் மூலமாக அஸ்வெசும பணத்தை திருடும் கும்பல்
செய்திகள்

இணையம் மூலமாக அஸ்வெசும பணத்தை திருடும் கும்பல்

March 10, 2026
காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முறியடிப்பு; 6.8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது
செய்திகள்

காங்கேசன்துறையில் தங்கக் கடத்தல் முறியடிப்பு; 6.8 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

March 10, 2026
நிலக்கரி ஊழலின் நஷ்டத்தை மக்கள் தலையில் கட்டவே எரிபொருள் விலை அதிகரிப்பு; நாமல் ராஜபக்ச
செய்திகள்

நிலக்கரி ஊழலின் நஷ்டத்தை மக்கள் தலையில் கட்டவே எரிபொருள் விலை அதிகரிப்பு; நாமல் ராஜபக்ச

March 10, 2026
புடின் வாழ்த்தால் உலக கவனம்; “மூன்றாம் உலகப் போர் ஆரம்பமா?”; மொசாட் கேள்வி
உலக செய்திகள்

புடின் வாழ்த்தால் உலக கவனம்; “மூன்றாம் உலகப் போர் ஆரம்பமா?”; மொசாட் கேள்வி

March 10, 2026
சம்மாந்துறையில் சட்டவிரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

சம்மாந்துறையில் சட்டவிரோத மாத்திரைகளுடன் ஒருவர் கைது

March 10, 2026
வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் விரைவில் புதிய நிறுவனம் மூலம் தொடக்கம்!
செய்திகள்

வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் விரைவில் புதிய நிறுவனம் மூலம் தொடக்கம்!

March 10, 2026
Next Post
உலக சந்தை விலை குறைந்தால் எரிபொருள் விலைகளை விரைவில் குறைப்போம்; மயூரு நெத்திகுமாரகே

உலக சந்தை விலை குறைந்தால் எரிபொருள் விலைகளை விரைவில் குறைப்போம்; மயூரு நெத்திகுமாரகே

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.