யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அருகிலுள்ள உள்ளூர் கடற்பரப்பில் நேற்று (09) காலை இலங்கை கடற்படை கடலோர பொலிஸ்படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின்போது, 6 கிலோ 865 கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற டிங்கி படகுடன் சந்தேக நபர்கள் இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
மேலும், இந்த நடவடிக்கையின்போது கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 41 மற்றும் 49 வயதுடைய யாழ்ப்பாணம், மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சந்தேக நபர்கள், தங்கப் பொதி மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.








