ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில் ஐ.நாவின் தீர்மானத்தில் மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதலையும் ஹோர்முஸ் நீரிணையை மூடி வர்த்தகத்தில் தலையிடுவதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தியா உள்ளிட்ட 135 நாடுகளின் ஆதரவோடு இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ் வாக்கெடுப்பை சீனா புறக்கணித்ததோடு, ரஷ்யா இத் தீர்மானத்தை விமர்சித்துள்ளது.








