Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 17 வயது சிறுவன் பலி; விசாரண CIDக்கு மாற்றம்

பொலிசாரின் துப்பாக்கிசூட்டில் 17 வயது சிறுவன் பலி; விசாரண CIDக்கு மாற்றம்

10 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (12) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அதன்போது , உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் 06க்கும் மேற்பட்டோர் மன்றில் முன்னியாகி, சிறுவனின் கொலை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என மன்றில் சுட்டிக்காட்டி , வழக்கு விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் என மன்றில் சமர்ப்பணங்களை முன் வைத்தனர்.

அதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. அதனால் கடுமையான வாத பிரதிவாதங்களை அடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை இன்றைய வழக்கு விசாரணைகளின் போது , பொலிஸ் உயர் அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள் , என 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

அத்துடன் வழக்கு விசாரணையின் போது , சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்றினை மீட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரினால் மீட்கப்படாத துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது சந்தேகத்திற்கு உரியது என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னியான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சம்பவம் நடைபெற்று ஒரு மாத கால பகுதி கடந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் எண்ணெய் இருப்பு உறுதி – அகழ்வு விரைவில்; அதன் பின்னர் வெளிநாட்டு எரிபொருட்களிலேயே தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை !
செய்திகள்

நாட்டில் எண்ணெய் இருப்பு உறுதி – அகழ்வு விரைவில்; அதன் பின்னர் வெளிநாட்டு எரிபொருட்களிலேயே தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லை !

March 13, 2026
அஸ்வெசும குறித்து பொய்யான தகவல் வழங்கினால் ஒரு வருட சிறை; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!
செய்திகள்

அஸ்வெசும குறித்து பொய்யான தகவல் வழங்கினால் ஒரு வருட சிறை; நலன்புரி நன்மைகள் சபை எச்சரிக்கை!

March 13, 2026
இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் கண்டுபிடிப்பு
செய்திகள்

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் கண்டுபிடிப்பு

March 13, 2026
மட்டக்களப்பில் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

March 13, 2026
திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவியாளர் கைது
செய்திகள்

திருகோணமலை தீயணைப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவியாளர் கைது

March 13, 2026
போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல்
செய்திகள்

போருக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்தடைந்த முதல் எண்ணெய் கப்பல்

March 13, 2026
Next Post
மட்டக்களப்பில் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.