யுத்த நிறுத்தத்திற்கு வாருங்கள் என இதுவரை அமெரிக்கா ஈரானிடம் ஐந்து தடவைகளுக்கு மேலாக கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்போது ஈரான் நாம் யுத்த நிறுத்தத்தை வரவேற்கின்றோம். ஆனால் தனிப்பட்ட சந்திப்புக்கள், மூடிய அறைக்குள் இராஜதந்திர பேச்சுவார்த்தை, ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் என நாம் எதனையும் இம்முறை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என உறுதியாகக் கூறியுள்ளது.
அதற்கு மாற்றமாக வெளிப்படையாக அமெரிக்கத் தரப்பு பொது ஊடகங்களில் உலக மக்களுக்கு முன்னால் இதுகுறித்த அழைப்பை விடுக்கவேண்டும், என்றும் எமது பதிலை நாமும் பொது ஊடகங்களில் உலக மக்களுக்கு முன்னால் முன்வைப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்தை ஆதரித்துள்ளது என அதன் பிரதமர் தனது செய்தியாளர் மாநாட்டில் மறைமுகமாக இன்று குறிப்பிட்டுள்ளார்.








