உலகளாவிய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும், இலங்கையின் விமானப் போக்குவரத்து சேவைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையில் அதன் தலைவர் ஜனித ருவன் கொடிதுவக்கு தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
தற்போது கையிருப்பில் உள்ள விமான எரிபொருள் அளவு மற்றும் நிலவும் சவால்களுக்கு மத்தியில் அவற்றை எவ்வாறு மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆராயப்பட்டது.
பயணிகள் மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்துச் சேவைகளை எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும், தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க மாற்றுத் தீர்வுகளைக் கண்டறிவதற்கும் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.








