இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. இது தொடர்பான மதிப்பாய்வு அறிக்கையினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்கு மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார சபை அனுமதி கோரியுள்ளது.
இந்த கட்டண முன்மொழிவினை மின்சார சபையானது, 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில் மின்சார சபையின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுமார் 15.8 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காகவே இந்தக் கட்டண உயர்வினை மின்சார சபை கோரியுள்ளது.
இந்த முன்மொழிவில் இறுதிப் பயனர் கட்டணங்கள் மற்றும் மொத்த விநியோகக் கட்டணங்கள் குறித்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் மதிப்பாய்வு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மின்சார கட்டணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன், உரிய தரப்பினர் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கலந்தாலோசனை ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
அந்த ஆவணத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,











