புத்தளம் – தலவில – எரம்புகொடெல்ல, பகுதிக்கு அண்மையில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் நானூற்று அறுபத்தெட்டு (468) கிலோகிராம் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புத்தளம் – தலவில, கடலோரப் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயவினால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இந்த பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 15 பைகளில் குறித்த பீடி இலைகள் கடத்தப்பட்டிருந்தன.
கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மதுவரி திணைக்களத்தின் புத்தளம் மாவட்ட அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.








