மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவில் கணவனின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகிய மனைவி படு காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (30) ஆற்றங்கரை வீதி புச்சாக்கேணியில இடம்பெற்றுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் மனைவி தமது தாயாருடன் வாழ்ந்து வந்த வேளை மனைவியை பலி தீர்க்கும் முகமாக தோணிதாட்ட மடு எனும் இடத்தில் வசித்து வந்த கணவர் கட்டுத் துப்பாக்கியுடன் வந்து அவரை சரமாரியாக சுட்டுள்ளார்.

இதன் போது படுகாயமடைந்தவர் வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கணவன் துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ளார் பொலிஸார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தியதனால் கணவனை பிரிந்து தாயாருடன் வசித்து வந்த வேளை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவமானது பிரதேசத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.








