ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை இன்று (31) நாட்டுக்குத்
தெரியப்படுத்தப்படுவார்கள் என பிவிதுரு ஹெல உருமய தலைவரும் சட்டத. தரணியுமான உதய
கம்மன்பில சமீபத்தில் தெரிவித்தார்.
உதய கம்மன்பில, 16 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்
கலந்துகொண்டபோது இதைத் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி யார் என்பதை மார்ச் 31 இல் வெளியிட நாங்கள் தயாராக
இருக்கிறோம், ஆனால் அரசாங்கம் அதை வெளியிடவில்லை.
ஒன்றரை வருடக் கடினமான ஆய்வுக்குப் பிறகு, ‘ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரியைத் தேடுதல்’
என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை நாங்கள் தயாரித்தோம்.
அந்த ஆய்வு நூலை மார்ச் 31 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பில் வெளியிட நாங்கள்
நம்புகிறோம் என தெரிவித்தார்.








