Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வலுசக்தி அமைச்சர் தானாகவே பதவி விலக வேண்டும்; நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்!

வலுசக்தி அமைச்சர் தானாகவே பதவி விலக வேண்டும்; நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்!

4 months ago
in செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள வலுசக்தி அமைச்சர், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்காகக் காத்திருக்காமல் தானாகவே முன்வந்து பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ஷ, அரசாங்கமே முறைகேடுகளை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர்கள் கூறினாலும், அதனால் ஏற்படும் நஷ்டத்தை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்தார்.

ஆளுங்கட்சியுடன் தொடர்புடைய எவருக்கும் ஊழலில் தொடர்பில்லை என முன்னர் கூறப்பட்ட போதிலும், தற்போது வலுசக்தி அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு அந்த கூற்றுகளுக்கு முரணாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் புதிய தலைமைத்துவங்கள் உருவாவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க மற்றும் அனுர குமார திஸாநாயக்க ஆகியோரின் தலைமையிலான அரசியல் சக்திகள் நாட்டின் அரசியல் களத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மூத்த அரசியல் தலைவர்களை ஓரம் கட்டுவது தவறு எனத் தெரிவித்த அவர், இளம் தலைவர்கள் உருவாவதற்கு அனுபவம் வாய்ந்த தலைவர்களின் வழிகாட்டல் அவசியம் எனத் தெரிவித்தார்.

“கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்கொண்டு, நவீனமயமாக்கலுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும்,” என நாமல் ராஜபக்ஷ தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது
காணொளிகள்

வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாமாங்கேஸ்வரர் கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது

August 2, 2026
மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி
செய்திகள்

மூதூரில் கோர விபத்தில் பல்கலை மாணவன் மற்றும் பிரான்ஸ் செல்லவிருந்த இளைஞன் பலி

August 2, 2026
தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை
செய்திகள்

தரமற்ற தலைக்கவசங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை

August 2, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
Next Post
சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது

சமய விழாக்களுக்கு மின்சாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.